வடமராட்சி துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு

10743 0

வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் பொலிஸார் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துன்னாலைப் பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, நேற்று நெல்லியடி, விராலியில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

Leave a comment